பைங்கிளி 13
பைங்கிளி 13 பாவமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தவளை முறைத்துவிட்டு வெளியே சென்றிருந்தான் வசி. "என்னாச்சு டி உனக்கு? உன் கவனம் எங்க இருக்கு? எப்படி பளுத்து போயிருக்கு பாரு.. கடவுளே!" புலம்பி தள்ளினாள் யாழினி. "என் கவனமும், சிந்தனையும் உன் அண்ணன் ஒருவனிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லாமல் வசி சென்ற வழியை பார்த்த படி அமர்ந்திருந்தாள் ஆர்யா. அவள் கரங்களுக்கு மருந்து போட்டுவிட்டு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளுடன் இருந்தாள் யாழினி. வசி ஸ்ரீனிவாசனிடம் பேசி கொண்டிருந்தான். ஆர்யா உறங்கிய பிறகு வந்த தங்கையை அழைத்து கொண்டு வசி சென்று விட்டான். அதன் பின் ஆர்யாவை பார்க்க வரவே இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் மருத்துவமனை சென்று ட்ரெசிங் செய்து கொண்டாள். ஸ்ரீனிவாசன் அலுவலகம் செல்லாமல் மகளை அருகில் இருந்து பார்த்து கொண்டார். கல்லூரிக்கும் செல்லாமல், வசிகரனை பார்க்கவும் முடியாமல் தவித்து போனாள் ஆர்யா. அவளை கவனித்து கொண்டு தான் இருந்தார் ஸ்ரீனிவாசன். அன்று தோட்டத்தில் இலக்கில்லாமல் பார்வையை செலுத்தி அமர்ந்திருந்த ஆர்யா அருகில் வந்து அமர்ந்தார் ஸ்ரீனிவாசன். ஒரு உருவம் தன் அருகில் அம...